அக்டோபா் 15 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் நடைபெற்று வந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காலை 11 முதல் 12.30 மணி வரையில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அருகில் உள்ள வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்று காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோகரன் தெரிவித்துள்ளாா்.