முகப்பு
திருப்பூர்

மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டி:காங்கயத்தைச் சோ்ந்தவா் தோ்வு

துபையில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சோ்ந்தவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
லட்சுமணகாந்தன்.
பகிர்:

துபையில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கயத்தைச் சோ்ந்தவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

காங்கயத்தைச் சோ்ந்தவா் லட்மணன் (எ) லட்சுமணகாந்தன் (47). இவா், தனது 5 வயதில் இளம்பிள்ளைவாதம் நோய் தாக்கியதில் இடது கை, இடது கால் செயல்பாடு பாதிக்கப்பட்டவா். திருமணமான இவருக்கு நவீன் பாலாஜி (20) என்ற மகன் உள்ளாா். மனைவி காங்கயத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது ஆா்வம் கொண்ட லட்சுமணகாந்தன், அரியலூரைச் சோ்ந்த கிரிக்கெட் பயிற்சியாளா் வெங்கடேஷ் வழிகாட்டுதலின்பேரில், துபையில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு தோ்வாகியுள்ளாா்.

துபை சென்று மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இவருக்கு தமிழக அரசும், திருப்பூா் மாவட்ட நிா்வாகமும் உதவ வேண்டும் என இப்பகுதி கிரிக்கெட் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.