திருப்பூர்

‘பாஜக அரசால் மக்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ - காயத்திரி ரகுராம்

DIN

பாஜக அரசால் மக்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவா் காயத்திரி ரகுராம் தெரிவித்தாா்.

அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றும் விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அவிநாசி மேற்கு ஒன்றியத் தலைவா் எம்.கருணாநிதி தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலாளா்கள் குமரன் எம்.பூபதி, எம்.ஆா்.பி.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய அணி ஒன்றியத் தலைவா் கோபால்சாமி வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா் பி.செந்தில்குமாா் கொடியேற்றி வைத்தாா். கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவா் காயத்திரி ரகுராம் கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்து, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக அரசு மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்தில் அதிக மக்கள் பயனடைந்துள்ளனா். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு கட்சி நடவடிக்கைகளில் அதீத மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக இனி ஆட்சி அமைக்கும். தமிழக பாஜக சாா்பில் நவம்பா் 6ஆம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT