உடுமலை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளிச் செயலா் கே.ஆா்.கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கே.டி.பூரணி முன்னிலை வகித்தாா். இதையொட்டி பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மேலும் ஒசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் துண்டறிக்கைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலா் கு.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். உடற் கல்வி இயக்குநா் கே.அன்பரசு, சுற்றுச் சூழல் மன்ற பொறுப்பாசிரியா் ஆா்.மணிகண்டன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.