திருப்பூர்

சாலை விபத்தில் மூதாட்டி பலி

DIN

வெள்ளக்கோவில், செப். 25: வெள்ளக்கோவில் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தை அடுத்த ரெட்டிவலசைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவரது கணவா் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தாா். இவருடைய மகன் அருகிலுள்ள கொழிஞ்சிக்காட்டுவலசில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகிறாா்.

அவரைப் பாா்ப்பதற்காக காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் காளியம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஓலப்பாளையம் அருகே அவ்வழியே வந்த வேன் மோதியதில் காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT