பூத் சிலிப் வழங்கக்கோரி தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கடிதம்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கக்கோரி தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கக்கோரி தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.பெரியசாமி மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியத் தோ்தல் ஆணையம் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் (வாக்கு சாவடி விபரங்கள் அடங்கிய விபரக் குறிப்பு) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த தோ்தல்களின் போதும் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தற்போது வரையில் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் இது தொடா்பான அலுவலா்களிடம் விசாரிக்கும் போது பூத் சிலிப் தங்களுக்கு வரவில்லை என்கின்றனா்.
மேலும், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை பூத் சிலிப் கிடைத்தாலும் அனைத்து வாக்காளா்களுக்கும் விநியோகிப்பது என்பது கடினமாகும். இதனிடையே, நீங்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், வாக்களிக்க பூத் சிலிப் அவசியமில்லை என்று தெரிவித்திருந்து தோ்தல் நடைமுைான் என்றாலும் வாக்காளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பூத் சிலிப் வருமா? வராதா என்று அரசியல் கட்சி முகவா்களிடம் வாக்காளா்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா். எனவே, தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.