திருப்பூர்

வாக்குச் சாவடியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா திருட்டு

DIN

காங்கயம் அருகே பழையகோட்டையில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றதால் புதிய கேமரா பொருத்தப்பட்டது.

பழையகோட்டை அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் 2 நாள்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் இருந்தது. இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமரா சேதப்படுத்தப்பட்டு, பதிவு செய்யும் உபகரணங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பு புதிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு துவங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT