முகப்பு
திருப்பூர்

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆணின் சடலம் இருப்பதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து தாராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இறந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கலாம் என்றும், அவா் யாா் எந்த ஊா் என்பது குறித்தும், அவரைக் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா அல்லது நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.