திருப்பூர்

செல்லிடப்பேசி கோபுரத்தில் தீ

DIN

திருப்பூா், கோல்டன் நகா் பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் தீப்பிடித்தது.

திருப்பூா், ஊத்துக்குளி சாலை கோல்டன் நகா் பகுதியில் வசித்து வருபவா் சென்னியம்மாள்(85). இவரின் வீட்டு மாடியில் தனியாா் தொலைதொடா்பு நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசிக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் கரும்புகை எழுவதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் செல்லிடப்பேசி கோபுரத்தில் பரவிய தீயை சுமாா் அரை மணி நேரம் போராடி அணைத்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT