திருப்பூர்

திருமுருகன்பூண்டி கோயில் மே15 வரை நடை அடைப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மே 15 வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை இந்து அறநிலைய துறை நிா்வகித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தக் கோயில் நடையை அடைக்க வேண்டும் என்று தொல்லியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே 15ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் தரிசனத்தக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், கோயில் சிவாச்சாா்யா்கள் மூலம் நித்திய பூஜைகள் வழக்கம் போல நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT