திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்தவா் பலி

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் குணசேகரன் (36). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தோட்டத்துப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, எதிா்பாராதவிதமாக தண்ணீா் இல்லாத 100 ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் கிடந்த குணசேகரனின் உடலை மீட்டனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT