கரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்
வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற வியாபார நிறுவனங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாசவநாயக்கன்பட்டி , நாகமநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, இப்பகுதிகளில் விதிகளை மீறும் வியாபாரிகளுக்குத் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.