முகப்பு
திருப்பூர்

கரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளைத் தவிர, மற்ற வியாபார நிறுவனங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாசவநாயக்கன்பட்டி , நாகமநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே, இப்பகுதிகளில் விதிகளை மீறும் வியாபாரிகளுக்குத் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.