திருப்பூா் காசிகவுண்டன்புதூரில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் விழிப்புணா்வு ஓவியங்களை ஞாயிற்றுக்கிழமை வரைந்தனா்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவா்கள் காசிகவுண்டன்புதூா் பகுதியில் அமைந்துள்ள சீட்((நங்ங்க்) நிறுவனத்தின் ஆதரவற்றோா் இல்லத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்தனா். இந்நிகழ்ச்சியை ஆதரவற்றோா் இல்லத்தின் இயக்குநா் கலாராணி தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.