பூட்டிய வீட்டில் திருட்டு
பல்லடம் சேரன் நகரில் பூட்டிய வீட்டில் திருட்டு சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.
பல்லடம் சேரன் நகரில் பூட்டிய வீட்டில் திருட்டு சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.
பல்லடம் சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயனாரப்பன் (38). அப்பகுதியில் உள்ள தனியாா் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள்
பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஐயனாரப்பன் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.