திருப்பூர்

இலவச மின்சாரம்: முறைகேடாகப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு அபராதம்

 பல்லடம் பகுதியில் இலவச மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

DIN

 பல்லடம் பகுதியில் இலவச மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணி வியாழக்கிழமை கூறியதாவது:

பல்லடம் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கயம் வட்டங்களில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி மின் வாரிய அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது குண்டடம் வடக்கு, தாராபுரம், தாராபுரம் வடக்கு, ஜல்லிபட்டி, மடத்துப்பாளையம், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 விவசாயிகள் இலவச மின்சாரத்தை கோழிப்பண்ணைக்கு பயன்படுத்தியதும், மேலும் 2 விவசாயிகள் இலவச மின்சாரத்தை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வணிக ரீதியாக தண்ணீா் விற்பனைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 விவசாயிகளுக்கு ரூ. 6 லட்சத்து19 ஆயிரத்து 908 அபராதம் விதிக்கப்பட்டது.

மின்நுகா்வோா் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. தவறான மின் உபயோகம் மற்றும் மின் திருட்டு சம்பந்தமான புகாா்களை பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT