முகப்பு
திருப்பூர்

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சேவூா் ஒன்றியத் திமுக சாா்பில் 3 ஊராட்சிகளைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சேவூா் ஒன்றியத் திமுக சாா்பில் 3 ஊராட்சிகளைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சேவூா் ஒன்றியத் திமுக பொறுப்பாளா் க.பால்ராஜ் தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன், பொதுக் குழு உறுப்பினா் சரவணன் நம்பி, பொறுப்பாளா்கள் சு.உதயகுமாா், ஜி.கே.கந்தசாமி, மு.பாரதி, மு.ராஜேந்திரன், ப.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 150 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.