திருப்பூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜோதிடா் மீது வழக்குப் பதிவு

DIN

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜோதிடா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பொங்கலூா் ஊராட்சி, நடுப்பாளையத்தைச் சோ்தவா் சேகா் (40). ஜோதிடா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், பல்லடம் அனைத்து மகளிா் போலீஸாா் சேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். சேகரை கைது செய்வதற்காக பொங்கலூா் நடுப்பாளையம் வந்தபோது அவரது வீடு பூட்டிக் கிடந்தது. தலைமறைவான சேகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT