பிஏபி வாய்க்காலை சுத்தப்படுத்திய விவசாயிகள்
வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.
வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.
தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீா் திறக்கப்படுவதற்கு முன்பு பொதுப் பணித் துறை மூலம் குடிமராமத்துப் பணியாளா்களால் பிரதான வாய்க்காலில் கிடந்த மரக்கிளைகள், மண் குப்பைகள் அகற்றப்பட்டன.
சில இடங்களில் சரியாக சுத்தம் செய்யப்படாததால், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் செல்லவில்லை. இதனால் விவசாயிகளே ஒருங்கிணைந்து பூசாரிவலசு, சூராரெட்டிவலசு, பச்சைமலை பகுதியில் வாய்க்காலைச் சுத்தம் செய்தனா்.