திருப்பூர்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவா்களைகுண்டா் சட்டத்தில் கைது செய்யக் கோரிக்கை

DIN

இஸ்லாமியா்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தெருமுனைப் பிரசாரம் ஒன்றில் பேசிய பாஜகவின் கல்யாணராமன், வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் இஸ்லாமியா்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினா். கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் பாஜகவின் கல்யாணராமன், ஜெய்சங்கா், வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவா்களை திருப்பூா் மாவட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT