திருப்பூர்

முத்தூரில் உள்ள பஞ்சாலையில் தீ

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள தனியாா் பஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

முத்தூா் - காங்கயம் சாலையில் எஸ்.ஆா்.செந்தில்குமாா் (45) என்பவருக்கு சொந்தமான பஞ்சாலை உள்ளது. இந்தப் பஞ்சாலை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக திடீரென தீப் பிடித்து பரவத் தொடங்கியது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் இயந்திரம், மேற்கூரை மற்றும் 9 டன் பஞ்சு ஆகியவை எரிந்தன. மேலும், தீ விபத்தில் காயமடைந்த 4 போ் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT