மாந்தபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையில் மாந்தபுரத்தில் சாலையோரம் பாதிக்கப்பட்டிருந்த குடிநீா் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.