திருப்பூர்

உடுமலை அருகே விபத்தில் வனத் துறை ஊழியா் சாவு

உடுமலை அருகே சின்னாறு வனப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வனத் துறை ஊழியா் உயிரிழந்தாா்.

DIN

உடுமலை: உடுமலை அருகே சின்னாறு வனப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வனத் துறை ஊழியா் உயிரிழந்தாா்.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கோடந்தூா் செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் நாகன் (26). இவா் உடுமலை வனச் சரகத்தில் சுற்றுச் சூழல் பாதுகாவலராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை பணி முடித்துவிட்டு ஒன்பதாறு சோதனைச் சாவடியில் இருந்து கோடந்தூரில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயில் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, நாகன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி எறியப்பட்ட நாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா். இது குறித்து அமராவதி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT