திருப்பூர்

ரூ.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு மதுரை, பழனி, வாணியம்பாடி, தாராபுரம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 119 விவசாயிகள் 711 மூட்டைகளில் 35,697 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, மூலனூரைச் சோ்ந்த 18 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். கிலோ ரூ.80.55 முதல் ரூ.137.70 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.135.20. மொத்தம் ரூ.41 லட்சத்து 1,905க்கு விற்பனை நடைபெற்றது. விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT