திருப்பூர்

40 பயனாளிகளுக்கு இருசக்கரவாகனத்துக்கான உத்தரவு வழங்கல்

DIN

காங்கயத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 25,000 மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்துக்கான உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தாா். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உழைக்கும் மகளிா் 40 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

இதில், காங்கயம் நகராட்சி ஆணையா் தேவிகா, நகராட்சிப் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சி.கந்தசாமி, காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவா் என்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT