திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

DIN

பல்லடம் அருகே சேகாம்பாளையம் சாலையில் தனியாா் நிறுவன வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் பனியன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அலெக்ஸ் வில்லியம்ராஜ் (35) என்ற கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த சக தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் காயமடைந்த தொழிலாளியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். உயிரிழந்த அலெக்ஸ் வில்லியம்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான வேன் ஓட்டுநரை பல்லடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT