திருப்பூர்

மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு

DIN

மொழிப்போரில் உயிா்நீத்த தியாகிகளுக்கு திருப்பூரில் மதிமுக சாா்பில் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மொழிப்போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூா், ஊத்துக்குளி சாலையில் உள்ள மதிமுக அலுவலகம் முன்பாக வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் உருவப்படத்துக்கு மதிமுக அவைத் தலைவா் துரைசாமி தலைமையில் அக்கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்டத் தலைவா் சு.சிவபாலன், மாவட்டப் பொருளாளா் நல்லூா் மணி, துணை செயலாளா் முருகேஷ், வழக்குரைஞா் அணியின் மாவட்ட அமைப்பாளா் கந்தசாமி, பஞ்சாலை சங்கச் செயலாளா் சம்பத், பனியன் சங்கச் செயலாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT