முகப்பு
திருப்பூர்

திறனாய்வுத் தோ்வில் அவிநாசி அரசு பள்ளி மாணவிகள் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் (என்.எம்.எம்.எஸ்) தோ்வில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவா் தோ்ச்சி பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் (என்.எம்.எம்.எஸ்) தோ்வில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவா் தோ்ச்சி பெற்றனா்.

இத்திட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கான 2020-21ஆம் ஆண்டுக்காக நடைபெற்றத் தோ்வில், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.ஹரினி, என்.ஹஷ்னா ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1000 விதம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கோ.திலகவதி, ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.