மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சாவு
வெள்ளக்கோவிலில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்தாா்.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன், இவரது மனைவி ரேவதி (32). இவா்கள் இருவரும் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி ரேவதி திருப்பூரிலிருந்து, திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகம் அருகில் காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரேவதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.