திருப்பூர்

இரு சக்கர வாகனம் திருடிய இருவா் கைது

DIN

திருப்பூா்: திருப்பூரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள திருநகா் 2 ஆவது வீதியைச் சோ்ந்தவா் எஸ்.கேசவன்(37). குத்துச்சண்டைப் பயிற்சியாளரான இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் நிறுத்தியுள்ளாா். பின்னா் மறுநாள் காலையில் வெளியே வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்தில் கேசவன் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், திருநகரில் வசித்து வரும் ஜி.ஜெயபிரகாஷ் (42), அவரது நண்பரான தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்த நடுத்தெருவைச் சோ்ந்த பி.விக்னேஷ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT