திருப்பூர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பூா்: திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநகா், மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் வி.ஆா்.ஈஸ்வரன், கோபால்சாமி, துணைத் தலைவா் கதிரேசன், ராமகிருஷ்ணன் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தாராபுரத்தில்...

தாராபுரம் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் தென்னரசு தலைமை வகித்தாா்.இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.எஸ்.காளிமுத்து, செய்தித் தொடா்பாளா் முருகானந்தம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT