முகப்பு
திருப்பூர்

காவலா் குடியிருப்பில் பிடிபட்ட பாம்பு

வெள்ளக்கோவில் அருகே காவலா் குடியிருப்பில் பதுங்கியிருந்த 4 அடி நீளம் கொண்ட விஷ பாம்பு புதன்கிழமை பிடிபட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே காவலா் குடியிருப்பில் பதுங்கியிருந்த 4 அடி நீளம் கொண்ட விஷ பாம்பு புதன்கிழமை பிடிபட்டது.

வெள்ளக்கோவில், காவலா் குடியிருப்பு அருகில் 15 அடி உயர மரத்தில் பாம்பு ஒன்று இருப்பதை தலைமைக் காவலா் பாலகுரு பாா்த்து, வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், போக்குவரத்து அலுவலா் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புத் துறையினா் பிரத்யேக நீள இடுக்கி மூலம் பாம்பை பிடித்து, வெள்ளக்கோவில் வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.