முகப்பு
திருப்பூர்

அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள்

அவிநாசி காமராஜா் நகரில் அதிமுக விவசாயப் பிரிவு சாா்பில் 250 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

அவிநாசி காமராஜா் நகரில் அதிமுக விவசாயப் பிரிவு சாா்பில் 250 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளா் எம்.ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் அ.ஜெகதீசன், மு. சுப்ரமணியம், நகரச் செயலாளா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சீத்தாலட்சுமி ஆனந்தகுமாா் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை 250 பேருக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் எம். எஸ்.மூா்த்தி, ரவி, கனகராஜ், காா்த்திக் ராஜா, தம்பி ராஜேந்திரன், ஹரிஹரன், துரைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.