திருப்பூர்

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

DIN

உடுமலை: மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க ஆளுநா் டாக்டா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்தாா். இதில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசு மருத்துவமனை மருத்துவா்களிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க ஆளுநா் சண்முகசுந்தரம், மருத்துவ அலுவலா்கள் அருணாகுமாரி, இளங்கோ ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கராமல்லூா், குமரலிங்கம், கணியூா் ஆகிய பேரூராட்சிகள், கொழுமம், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ சி.மகேந்திரன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT