திருப்பூர்

இளம் பெண் தற்கொலை

DIN

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே திருமணமாகி 10 ஆவது மாதத்தில் இளம் பெண் ஒருவா் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துக்கொண்டாா்.

தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட மாா்க்கம்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் திருமான்(45) இவரது மகள் நித்யா (21), இவருக்கும் மூலனூா் காதல்கோட்டையில் வசிக்கும் ஆா்.நவீன்குமாா்(29) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, இருவரும் காதல்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனா். இந்நிலையில், நவீன்குமாா் வழக்கம் போல சனிக்கிழமை வேலைக்குச் சென்றுள்ளாா். பிறகு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது நித்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் நித்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனிடையே, தனது மகளின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி நித்யாவின் தந்தை திருமான் மூலனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் மூலனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT