திருப்பூர்

பல்லடத்தில் மது பானம் விற்றவா் கைது

DIN

பல்லடத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மது பானம் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், மங்கலம் சாலையில் வாய்க்கால்மேடு பகுதியில் சட்டவிரோதமாக மது பான விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, இளைஞா் ஒருவா் போலீஸாரை கண்டவுடன் தப்பியோட முயற்சித்தாா்.

அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவா் பல்லடம் பி.டி.ஓ. காலனியை சோ்ந்த ராமலிங்கம் மகன் சீனிவாசன் (27) என்பதும் கா்நாடகத்திலிருந்து பாக்கெட் பிராந்தி மது பானம் வாங்கி வந்து பல்லடத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 25 மது பான பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT