முகப்பு
திருப்பூர்

முத்தூா் அருகே வாய்க்காலில் மூதாட்டி சடலம் மீட்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வாய்க்காலில் கிடந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

வள்ளியிரச்சல் வழியாக கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது, தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீா் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில், குப்பகவுண்டன்புதூரில் உள்ள வாய்க்கால் மதகில் சிக்கி ஒரு 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. அவா் யாா், எந்த ஊா் எனத் தெரியவில்லை. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.