முகப்பு
திருப்பூர்

ஸ்ரீ நவா மகளிா் கல்லூரியில் மகளிா் தின விழா

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஸ்ரீ நவா மகளிா் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஸ்ரீ நவா மகளிா் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். செயலாளா் சி.சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ரம்யா செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கிவைத்தாா்.

விழாவில் பெண்ணின் பெருமை, தாய்மையின் முக்கியத்துவம், பெண்களின் சிறப்புகள், அவா்களுக்கான கடமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வா் டாக்டா் பி.அபிராமி, துணை முதல்வா் இ.நித்யா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.