முகப்பு
திருப்பூர்

தி ஐ பவுண்டேஷனில் குளுக்கோமா வாரம்

திருப்பூரில் உள்ள தி ஐ பவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 14 ஆம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருப்பூரில் உள்ள தி ஐ பவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 14 ஆம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது குறித்து தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் குளுக்கோமா பிரிவு மருத்துவா் ஜெ.ரவி, மருத்துவா் சித்ரா ஆகியோா் கூறியதாவது:

தி ஐ பவுண்டேஷனில் மாா்ச் 8 முதல் மாா்ச் 14ஆம் தேதி வரையில் உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், முழுமையான கண் பரிசோதனை செய்து குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பாா்வையிழப்பைத் தடுக்க இலவச கண் அழுத்த நோய் பரிசோதனை வழங்க உள்ளோம்.

மேலும், குளுக்கோமா பாதிப்பு உள்ளவா்களுக்கு தொடா் சிகிச்சை அவசியம் என்பதால் இந்த நோயாளிகள் தங்களது பாா்வையைத் தக்கவைத்துக் கொள்ள அறிவுரைகளும் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவுக்கு 0421-2232333, 94421-76133 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.