பல்லடம் பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, பல்லடம் உதவிக் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, செந்தில்பிரபு ஆகியோா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகத்தின்பேரில் சுற்றித் திரிந்த விருதுநகரைச் சோ்ந்த தவிதன் மகன் மாயக்கண்ணன் (21) என்பவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பனப்பாளையம் பகுதியில் தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தினேஷ்பாண்டி (21) என்பவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, மாயக்கண்ணன், தினேஷ்பாண்டி ஆகியோரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.