திருப்பூர்

காங்கயத்தில் திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

DIN

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜனிடம் அவா் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி கடந்த மக்களவைத் தோ்தலில் 39க்கு 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதைப்போல, இந்தத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்’ என்றாா்.

ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மணி ஆகியோா் உடனிருந்தனா்.

காங்கயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன். அவருடன், ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் வழக்கறிஞா் மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT