திருப்பூர்

வாய்க்கால்களில் 2 சடலங்கள் மீட்பு

DIN

காங்கயம் அருகே, இருவேறு இடங்களில் வாய்க்கால்களில் கிடந்த 2 சடலங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, திட்டுப்பாறை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் போலீஸாா், அந்த சடலத்தை மீட்டனா்.

மற்றொரு சம்பவம்

காங்கயம் அருகே, பழையகோட்டை சாலை, நாட்டாா்பாளையம் பிரிவு அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காங்கயம் போலீஸாா் மீட்டனா். இந்த 2 சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT