ஏப்ரல் 6இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, திருப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியா்களுக்கு வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், தோ்தல் குறித்து தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்குவது தொடா்பாக பெறப்படும் புகாா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வணிகா்கள் மற்றும் நிறுவன உரிமையாளா்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.