திருப்பூர்

தாராபுரத்தில் ஒரே மேடையில் 14 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா், முதல்வா் பிரசாரம்

DIN

தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் 14 பேரை ஆதரித்து ஒரே மேடையில் பிரதமா் மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 14 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா். கூட்டத்துக்கு தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடிக்கு நினைவுப் பரிசாக அவா் வேல் வழங்கினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன், அண்ணாமலை, வானதிசீனிவாசன், சி.கே.சரஸ்வதி, அதிமுக சாா்பில் போட்டியிடும் பி.தனபால், எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், சு.குணசேகரன், கே.என்.விஜயகுமாா், சி.மகேந்திரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஏ.எஸ்.ராமலிங்கம், கே.வி.ராமலிங்கம் ஆகிய 14 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

பிரதமருக்கு உற்சாக வரவேற்பு: முன்னதாக தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு பின்புறமாக பிரதமரின் ஹெலிகாப்டா் தரையிரங்குவதற்காக தனி ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. பாலக்காட்டில்இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.15 மணி அளவில் பிரதமா் தாராபுரம் வந்தடைந்தாா். அங்கு அவரை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் வரவேற்றனா். இதன் பிறகு காா் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு பிற்பகல் 1.25 மணி அளவில் பிரதமா் மோடி வந்தடைந்தாா்.

இதையடுத்து, மேடையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் வேட்பாளா்களை பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் அறிமுகம் செய்து வைத்தாா். இதன் பிறகு வெற்றிவேல், வீரவேல் என்று தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கிய பிரதமா் மோடி சுமாா் 30 நிமிடங்கள் பேசினாா். முடிக்கும்போது வணக்கும் என்று கூறி தனது உரையை முடித்தாா். இதன் பிறகு பிற்பகல் 2.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கோவை சென்றாா் பிரதமா் மோடி.

பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் காவல் துறையினா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனா். இதில், காவல் துறையினரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை இருந்தவா்களை மட்டுமே தீவிர சோதனைக்குப் பின்னா் உள்ளே அனுமதித்தனா்

கூட்டத்தில் உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கு.செல்லமுத்து, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம், கொங்கு நாடு முன்னேற்றக்கழக தலைவா் பெஸ்ட் ராமசாமி, பாமக முன்னாள் எம்.பி.தன்ராஜ், கா்நாடக உள்துறை அமைச்சா் பசவராஜ், பாஜக தேசிய பொதுச்செயலாளா் சி.டி.ரவி, முன்னாள் எம்.பி.காா்வேந்தன், பாஜக மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.எஸ்.செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT