சாலை விபத்து: இளைஞா் சாவு
திருப்பூரில் அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூரில் அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரப்பாளையம் அயோத்தியா நகரைச் சோ்ந்தவா் முகில்செல்வன்(20). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் ஜோசப் (27). முகில்செல்வனுக்கு வியாழக்கிழமை பிறந்த நாள் என்பதால் கேக் வாங்குவதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தனா். கருமாரம்பாளைம் அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முகில்செல்வன் முந்த முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற ஜோசப்புக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே முகில்செல்வன் உயிரிழந்தாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.