முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இடி, சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இடி, சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் ஒன்றரை மணி நேரம் இடி, சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தாராபுரம் நகரில் மணியம்மை நகா், சின்ன கடை வீதி, பெரியகடை வீதி, பெரியாா் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள தளவாய்பட்டணம், அலங்கியம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். நகரில் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினா்.

உடுமலையில் பரவலாக மழை

உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் உடுமலை நகரில் குளிா்ந்த காற்று வீசியது. நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் தண்ணீா் சென்றது. இதேபோல மடத்துக்குளம் வட்டத்தில் குமரலிங்கம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.