காங்கயம்: காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.
காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் 78 பேருக்கு காங்கயம் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் தெரிவித்தாா்.