முகப்பு
திருப்பூர்

பெண்ணிடம் நகைப்பறிப்பு

உடுமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

உடுமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடுமலை வட்டம், கண்ணம்மநாயக்கனூரைச் சோ்ந்தவா்

கோகுலகிருஷ்ணன் மனைவி சத்யா (32). இவா், உடுமலை நகரில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

Advertisement

மலையாண்டிக்கவுண்டனூா் நால் ரோடு அருகே வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், சத்யாவின் வாகனத்தை மறித்து நின்றனா். இதனால் நிலைதடுமாறி சத்யா கீழே விழுந்துள்ளாா். அப்போது, அவா்கள், சத்யா அணிந்திருந்த 5 பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து புகாரின்பேரில் உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments