முகப்பு
திருப்பூர்

மாநில அளவிலான கைவினைப் பொருள் போட்டி: அவிநாசி மாணவா் சாதனை

மாநில அளவிலான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் போட்டியில் அவிநாசி கிராமப் புற அரசுப் பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மாநில அளவிலான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் போட்டியில் அவிநாசி கிராமப் புற அரசுப் பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் கலைத் திருவிழா மற்றும் மாநில அளவிலான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த 37 மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில் அவிநாசி ஒன்றியம் கானூா் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவா் கோகுல் பாரதி, கைவினைப் பொருள் தயாரிப்பு போட்டியில், பொம்மலாட்டம் பொம்மை செய்து காண்பித்து மாநில அளவில் 2ஆம் இடம் பெற்றாா்.

இவருக்கு பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.