பல்லடம் நகராட்சிப் பகுதியில் மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) நடைபெறவுள்ளது.
நகராட்சி வாா்டு எண் 6, 7, 8, 13, 14, 15, 16, 17, 18 ஆகிய வாா்டுகளுக்கு காலை 10.30 மணிக்கு பல்லடம் மணிமண்டபத்திலும், வாா்டு எண் 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12 ஆகிய வாா்டுகளுக்கு எம்.சி. திருமண மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். இதில், மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் கலந்துகொள்கிறாா்.
இம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று பல்லடம் நகர திமுக பொறுப்பாளா் ந.ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.