காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் ரவி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தங்கராசு முன்னிலை வகித்தாா்.
கிராமசபை பற்றாளா் மனோரஞ்சிதா கலந்து கொண்டாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுக்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகளைத் தோ்வு செய்து, நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.